பழிவாங்கிய முன்விரோதம்? இல்லை பலிவாங்கிய பேரிடர்? திண்டிவனத்தில் நடந்த பயங்கரம்!

திண்டிவனம் அருகே நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்ற நபரின் உடல் 3 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள இரட்டணையை சேர்ந்தவர் செல்வம். இவர் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார்.


இவருக்கு சுதா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். எல்லாம் சுமூகமாய் போய் கொண்டிருந்த வாழ்க்கை எதிர்பாராதவிதமாக பயங்கரத்தின் முகத்தை காட்டியுள்ளது.


கணவனை இழந்து நிற்கும் மனைவிக்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் போதாது என்றே தோன்றுகிறது. இவர்கள் குடும்பத்தின் வருவாய் ஆதாரமாய் விளங்கிய செல்வம் தற்போது உயிரோடு இல்லை. அப்படி என்ன நடந்தது? விரிவாக காணலாம்.


கடந்த ஒன்றாம் தேதி தனது நண்பர்கள் அருண்குமார், சின்னதுரை ஆகியோருடன் செல்வம் அருகே உள்ள ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அதன் பின்னர் நீண்ட நேரம் ஆகியும் செல்வம் வீடு திரும்பவில்லை.

இதனால் செல்வத்தின் உறவினர்கள் அருண்குமார், சின்னதுரை ஆகியோரின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்துள்ளனர். இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.